கமாஷீ து:க்க
நிவாரண ஆஷ்டகம்
மங்கள ரூபிணி
மதி அணி சூ'லினி
மன்மத பாணியலள்ளே
சங்கடம் நீங்கிடச்
சடுதியில் வந்திடும்
ச'ங்கர ஸெந்தரியே !
கங்கண பாணியன்
கனிமுகம் கண்டநல்
கற்பகக் காமினியே
ஜய ஜய சங்கரி
கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாக்ஷி
!! 1
கான் உருமலர்
எனநக்கதிர் ஒளி காடிக்
காத்தி டவந்திடவாள்
தான் உறு தவஓளி
மதி ஓளி
தாங்கியே
வீசிடுவாள் !
மான் உரு வ்ழியாள்
மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்
ஜய ஜய சங்கரி
கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாஷி
! 2
சங்கரி ஸௌந்தரி
சதுர்முகன் போட்ற்றிடச்
சபையினில
வந்தவள்ளே
பொங்கு அரிமாவினில்
பொன்னடி வைத்துப்
பொருந்திட
வந்தவளே !
எம்குலம தழைத்திட
எழில் வடிவுடனே
எழுந்தநல
துர்க்கையளே
ஜய ஜய சங்கரி
கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாக்ஷி
! 3
தணதண தந்தண
தவில்ஓலி முழங்கிட
தண்மணி நீ
வருவாய்
கணகண கங்கண
கதிர் ஓளிவீசிடக்
கண்மணி நீ
வருவாய் !
பணபண பம்பண
பறைஓலி கூவிடப்
பண்மணி நீ
வருவாய்
ஜய ஜய சங்கரி
கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாக்ஷி
! 4
பஞ்சமி,
பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியள்ளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு
வேழனைக்
கொடுத்தநல் குமரியளே !
சங்கடம் தீர்த்திடச்
சமர் அது செய்தநல்
சக்தி எனும் மாயே
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமக்ஷி 5
எண்ணியபடி
நீ அருளீட வருவாய்
எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது
நலமாய்ப்
பல்கிட அருள்ளிடுவாய்
!
கண்ணோளி அதனால் கருணையே
காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாஷி !! 6
இடர்தரு
தொல்லை இனிமேல் இல்லை
என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு
அமுதே கருதிகள்
கூறிச்
சுகமது தந்திடுவாய்
!
படர்தரு இருளில் பரிதியாய்
வந்து
பழவினை ஓட்டிடுவாய்
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமக்ஷி !! 7
ஜய ஜய பாலா
சாமுண்டேஷ்வரி ஜய ஜய
ஸ்ரீதேவி !!
ஜய ஜய துர்க்கா ஸ்ரீ
பரமெஷ்வரி ஜய ஜய ஸ்ரீதேவி
!!
ஜய ஜய ஜயந்தி மங்களகாளி
ஜய ஜய ஸ்ரீதேவி
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாக்ஷி
!! 8