Click on the link below to hear the Audio..
                           
                           
                            
                            
                           Tamil version of the Slokam:
                            
                           சஷ்டியை நோக்கச் சரவண
                           பவனார் 
சிஷ்டருக்கு
                           உதவுஞ் செங்கதிர் வேலோன்:
                           
                           பாதம் இரண்டில் பண்மணிச்
                           சதங்கை 
                           கீதம் பாடக் கிண்கிணி
                           யாட, 
                           மையல் நடஞ்செய்யும்
                           மயில்வாகனனார் 
                           கையில் வேலால்எனைக்
                           காக்கவென்று உவந்து 
                           வரவர வேலா யுதனார்
                           வருக 
                           வருக வருக மயிலோன்
                           வருக 
                           இந்திரன் முதலா எண்திசை
                           போற்ற 
                           மந்திர வடிவேல் வருக
                           வருக 
                           இந்திரன் முதலா எண்திசை
                           போற்ற 
                           மந்திர வடிவேல் வருக
                           வருக 
                           வாசவன் மருகா வருக
                           வருக 
                           நேசக் குறமகள் நினைவோன்
                           வருக 
                           ஆறுமுகம் படைத்த ஐயா
                           வருக 
                           நீறுஇடும் வேலவன்
                           நித்தம் வருக 
                           சிரகிரி வேலவன் சீக்கிரம்
                           வருக 
                           சரவண பவனார் சடுதியில்
                           வருக 
                           ரவண பவச ரரரரரரர 
                           ரிவண பவச ரிரிரிரி
                           ரிரிரி 
                           விணபவ சரவண வீரா நமோநம
                           
                           நிபவ சரவண நிறநிற நிறென
                           
                           வசர ஹணப வருக வருக 
                           அசுரர் குடிகெடுத்த
                           ஐயா வருக 
                           என்னை ஆளும் இளையோன்
                           கையில் 
                           பன்னிரண்டு ஆயுதம்
                           பாசாங் குசமும் 
                           பரந்த விழிகள் பன்னிரண்டு
                           இலங்க 
                           விரைந்துஎனைக் காக்க
                           வேலோன் வருக 
                           ஐயும் கிலியும் அடைவுடன்
                           சௌவும் 
                           உய்யளி சௌவும் உயிரையும்
                           கிலியும் 
                           கிலியுஞ் சௌவும் கிளரொளி
                           யையும் 
                           நிலைபெற்று என்முன்
                           நித்தமும் ஒளிரும் 
                           சன்முகன் தீயும தனிஒளி
                           யவ்வும் 
                           குண்டலி யாம் சிவகுகன்
                           தினம் வருக 
                           ஆறுமுகமும் அணி முடி
                           ஆறும் 
                           நீறுஇடும் நெற்றியும்
                           நீண்ட புருவமும், 
                           பன்னிரு கண்ணும் பவளச்
                           செவ்வாயும் 
                           நன்னெறி நெற்றியில்
                           நவமணிச் சுட்டியும் 
                           ஈராறு செவியில் இல
                           கு குண்டலமும் 
                           ஆறுஇரு திண்புயத்து
                           அழகிய மார்பில் 
                           பல்பூ ஷணமும் பதக்கமும்
                           தரித்து 
                           நன்மணி பூண்ட நவரத்ன
                           மாலையும் 
                           முப்புரி நூலும் முத்துஅணி
                           மார்பில் 
                           செப்பழகு உடைய திருவயிறு
                           உந்தியும் 
                           துவண்ட மருங்கில்
                           சுடரொளிப் பட்டும் 
                           நவரத்னம் பதித்த நற்
                           சீராவும் 
                           இருதொடை அழகும் இணை
                           முழந்தாளும் 
                           திருவடி யதனில் சிலம்பொலி
                           முழங்க 
                           செககண செககண செககண
                           செகண 
                           மொகமொகமொகமொகமொகமொக
                           மொகென 
                           நகநக நகநக நகநக நகென
                           
                           டிகுகுண டிகுடிகு
                           டிகுகுண டிகுண 
                           ரரரர ரரரர ரரரர ரரர
                           
                           ரிரிரிரி ரிரிரிரி
                           ரிரிரிரி ரிரிரி 
                           டுடுடுடு டுடுடுடு
                           டுடுடுடு டுடுடு 
                           டகுடகு டிகுடிகு டங்கு
                           டிங்குகு 
                           விந்து விந்து மயிலோன்
                           விந்து 
                           முந்து முந்து முருகவேள்
                           முந்து 
                           எந்தனை யாளும் ஏரகச்
                           செல்வ 
                           மைந்தன் வேண்டும்
                           வரமகிழ்ந்து உதவும் 
                           லாலா லாலா லாலா வேசமும்
                           
                           லீலா லீலா விநோதன்
                           என்று 
                           உன் திருவடியை உறுதியென்று
                           எண்ணும் 
                           என்தலை வைத்து உன்
                           இணையடி காக்க 
                           என்னுயிர்க்கு உயிராம்
                           இறைவன் காக்க 
                           பன்னிரு விழியால்
                           பாலனைக் காக்க 
                           அடியேன் வதனம் அழகுவேல்
                           காக்க 
                           பொடிபுனை நெற்றியைப்
                           புனிதவேல்காக்கக் 
                           கதிர்வேல் இரண்டும்
                           கண்ணினை காக்க 
                           விதிசெவி இரண்டும்
                           வேலவர் காக்க 
                           நாசிகள் இரண்டும்
                           நல்வேல் காக்க 
                           பேசிய வாய்தனைப் பெருவேல்
                           காக்க 
                           முப்பத்து இருபல்முனைவேல்
                           காக்க 
                           செப்பிய நாவைச் செவ்வெல்
                           காக்க 
                           கன்னம் இரண்டும் கதிர்வேல்
                           காக்க 
                           என்இளம் கழுத்தை இனியவேல்
                           காக்க 
                           மார்பை இரத்ன வடிவேல்
                           காக்க 
                           சேர்இள முலைமார் திருவேல்
                           காக்க 
                           வடிவேல் இருதோள் வளம்பெறக்
                           காக்க 
                           பிடரிகள் இரண்டும்
                           பெருவேல் காக்க 
                           அழகுடன் முதுகை அருள்வேல்
                           காக்க 
                           பழுபதி னாறும் பருவேல்
                           காக்க 
                           வெற்றிவேல் வயிற்றை
                           விளங்கவே காக்க 
                           சிற்றிடை அழகுறச்
                           செவ்வேல் காக்க 
                           நாண்ஆம் கயிற்றை நல்வேல்
                           காக்க 
                           ஆண்பெண் குறிகளை அயில்வேல்
                           காக்க 
                           பிட்டம் இரண்டும்
                           பெருவேல் காக்க 
                           வட்டக் குதத்தை வல்வேல்
                           காக்க 
                           பணைத்தொடை இரண்டும்
                           பெருவேல் காக்க 
                           கணைக்கால் முழுந்தாள்
                           கதிர்வேல் காக்க 
                           ஐவிரல் அடியிணை அருள்வேல்
                           காக்க 
                           கைகளிரண்டும் கருணைவேல்
                           காக்க 
                           முன்கை இரண்டும் முரண்வேல்
                           காக்க 
                           பின்கை இரண்டும் பின்னவள்
                           காக்க 
                           நாவில் சரஸ்வதி நல்
                           துணையாக 
                           நாபிக் கமலம் நல்வேல்
                           காக்க 
                           முப்பால் நாடியை முனைவேல்
                           காக்க 
                           எப்பொழுதும் எனை எதிர்வேல்
                           காக்க 
                           அடியேன் வசனம் அவைவுள
                           நேரம் 
                           கடுகவே வந்து கனகவேல்
                           காக்க 
                           வரும்பகல் தன்னில்
                           வச்சிரவேல் காக்க 
                           அரையிருள் தன்னில்
                           அனையவேல் காக்க 
                           ஏமத்தில் சாமத்தில்
                           எதிர்வேல் காக்க 
                           தாமதம் நீக்கிச் சதுர்வேல்
                           காக்க 
                           காக்க காக்க கனகவேல்
                           காக்க 
                           நோக்க நோக்க நொடியில்
                           நோக்க 
                           தாக்க தாக்கத் தடையறத்
                           தாக்க 
                           பார்க்க பார்க்க பாவம்
                           பொடிபட 
                           பில்லி சூன்யம் பெரும்பகை
                           அகல 
                           வல்ல பூதம் வாலாஷ்டகப்
                           பேய்கள் 
                           அல்லல் படுத்தும்
                           அடங்கா முனியும் 
                           பிள்ளைகள் தின்னும்
                           புறக்கடை முனியும் 
                           கொள்ளிவாய்ப்பேய்களும்
                           குறளைப் பேய்களும் 
                           பெண்களைத் தொடரும்
                           பிரம்ம ராட்சதரும் 
                           அடியனைக் கண்டால்
                           கலங்கிட 
                           இரிசிகாட் டேரி இத்துன்ப
                           சேனையும் 
                           எல்லிலும் இருட்டிலும்
                           எதிர்படும் அண்ணரும்
                           
                           கனபூசை கொள்ளும் காளியோடு
                           அனைவரும் 
                           விட்டாங்காரரும்
                           மிகு பல பேய்களும் 
                           தண்டியக்காரரும்
                           சண்டாளர்களும் 
                           என்பெயர் சொல்லவும்
                           இடி விழுந்துஓடிட 
                           ஆனை அடியினில் அரும்பா
                           வைகளும் 
                           பூனை மயிரும் பிள்ளைகள்
                           என்பும் 
                           நகமும் மயிரும் நீண்முடி
                           மண்டையும் 
                           பாவைகள் உடனே பலகல
                           சத்துடன் 
                           மனையில் புதைத்த வஞ்சனை
                           தனையும் 
                           ஒட்டியச் செருக்கம்
                           ஒட்டியப் பாவையும் 
                           காசும் பணமும் காவுடன்
                           சோறும் 
                           ஓதும் அஞ்சனமும் ஒருவழிப்
                           போக்கும் 
                           அடியனைக் கன்டால்
                           அலைந்து குலைந்திட 
                           மாற்றார் வஞ்சகர்
                           வந்து வணங்கிட 
                           கால தூதாள் எனைக் கண்டால்
                           கலங்கிட 
                           அஞ்சி நடுங்கிட அரண்டு
                           புரண்டிட 
                           வாய்விட்டு அலறி மதிகெட்டு
                           ஓடப் 
                           படியினில் முட்டப்
                           பாசக் கயிற்றால் 
                           கட்டுடல் அங்கம் கதறிடக்
                           கட்டு 
                           கட்டி உருட்டு கால்கை
                           முறியக் 
                           கட்டு கட்டு கதறிடக்
                           கட்டு 
                           முட்டு முட்டு விழிகள்
                           பிதுங்க 
                           செக்கு செக்கு செதில்
                           செதிலாக 
                           சொக்கு சொக்குச் சூர்ப்பகைச்
                           சொக்கு 
                           குத்து குத்து கூர்வடி
                           வேலால் 
                           பற்று பற்று பகலவன்
                           தணல் எரி 
                           தணல்எரி தணல்எரி தணல்அது
                           ஆக 
                           விடுவிடு வேலை வெருண்டது
                           ஓடப் 
                           புலியும் நரியும்
                           புன்னரி நாயும் 
                           எலியும் கரடியும்
                           இனித் தொடர்ந்து ஓடத்
                           
                           தேளும் பாம்பும் செய்யான்
                           பூரான் 
                           கடிவிட விஷங்கள் கடித்து
                           உயிர் அங்கம் 
                           ஏறிய விஷங்கள் எளிதுடன்
                           இறங்க 
                           ஒளிப்புஞ்சுளுக்கும்
                           ஒருதலை நோயும் 
                           வாதஞ் சயித்தியம்
                           வலிப்புப் பித்தம் 
                           சூலைசயம் குன்மம்
                           சொக்குச் சிரங்கு 
                           குடைச்சல் சிலந்தி
                           குடல்விப் பிரிதி 
                           பக்கப் பிளவை படர்தொடை
                           வாழை 
                           கடுவன் படுவன் கைத்தாள்
                           சிலந்தி 
                           பற்குத் தறணை பருவரை
                           யாப்பும் 
                           எல்லாப் பிணியும்
                           என்றனைக் கண்டால் 
                           நில்லாது ஓட நீ எனக்கு
                           அருள்வாய் 
                           ஈரேழ் உலகமும் எனக்கு
                           உறவாக 
                           ஆணும் பெண்ணும் அனைவரும்
                           எனக்கா 
                           மண்ணாள் அரசரும் மகிழ்ந்து
                           உறவாகவும் 
                           உன்னைத் துதிக்க உன்திரு
                           நாமம் 
                           சரவண பவனே சையனிபவனே
                           
                           திரிபுர பவனே திகழ்ஒளி
                           பவனே 
                           பரிபுர பவனே பவமொழி
                           பவனே 
                           அரிதிரு மருகா அமரா
                           பதியைக் 
                           காத்துத் தேவர்கள்
                           கடுங்சிநை விடுத்தாய்
                           
                           கந்தா குகனே கதிர்வே
                           லவனே 
                           கார்த்திகை மைந்தா:
                           கடம்பா கடம்பனை 
                           இடும்பனை அழித்த இனியவேல்
                           முருகா 
                           தணிகா சலனே சங்கரன்
                           புதல்வா 
                           கதிர்காமத்து உறை
                           கதிர்வேல் முருகா 
                           பழநிப் பதிவாழ் பால
                           குமரா 
                           ஆவினன் குடிவாழ் அழகிய
                           வேலா 
                           செந்தின்மாமலையுறும்
                           செங்கல்வராயா 
                           சமரா புரிவாழ் சண்முகத்து
                           அரசே 
                           என்நா இருக்க, யான்
                           உனைப்பாட 
                           எனைத்தொடர்ந்து இருக்கும்
                           எந்தை 
                           முருகனைப் பாடினேன்
                           ஆடினேன் 
                           பரவசமாக ஆடினேன் நாடினேன்
                           ஆவினன் 
                           பூதியை நேசமுடின்
                           யான் நெற்றியில் அணியப்
                           
                           பாச வினைகள் பற்றது
                           நீங்கி 
                           உன்பதம் பெறவே உன்
                           அருள் ஆக 
                           அன்புடன் இரட்சி அன்னமும்
                           சொன்னமும் 
                           மெத்தமெத் தாக வேலா
                           யுதனார் 
                           சித்திபெற்று அடியேன்
                           சிறப்புடன் வாழ்க 
                           வாழ்க வாழ்க மயிலோன்
                           வாழ்க 
                           வாழ்க வாழ்க மலைக்குர
                           வாழ்க 
                           வாழ்க வாழ்க மலைக்குற
                           மகளுடன் 
                           வாழ்க வாழ்க வாரணத்
                           துவசன் 
                           வாழ்க வாழ்கஎன் வறுமைகள்
                           நீங்க 
                           எத்தனை குறைகள் எத்தனை
                           செய்யினும் 
                           பெற்றவன் குறமகள்
                           பெற்ற வளாமே 
                           பிள்ளையென்று அன்பாய்
                           பிரியம் வைத்து 
                           மைந்தஎன் மீதுன் மனமகிழ்ந்து
                           அருளித் 
                           தஞ்சமென்று அடியார்
                           தழைத்திட அருள்செய் 
                           கந்தர் சஷ்டி கவசம்
                           விரும்பிய 
                           பாலன் தேவராயன் பகர்ந்ததை
                           
                           காலையில் மாலையில் கருத்துடன்
                           நாளும் 
                           ஆசா ரத்துடன் அங்கம்
                           துலக்கி 
                           நேச முடன்ஒரு நினைவது
                           ஆகிக் 
                           கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
                           
                           சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
                           
                           ஒருநாள் முப்பத் தாறுஉருக்
                           கொண்டு 
                           ஒதியே ஜெபித்து உகந்து
                           நீறுஅணிய 
                           அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும்
                           வசமாய்த் 
                           திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு
                           அருளுவ 
                           மாற்றலர் எல்லாம் வந்து
                           வணங்குவர் 
                           நவகோள் மகிழ்ந்து நன்மை
                           யளித்திடும் 
                           நவமதன் எனவும் நல்எழில்
                           பெறுவர் 
                           எந்த நாளும் ஈரொட்டாய்
                           வாழ்வர் 
                           கந்தர்கை வேலாம் கவசத்து
                           அடியை 
                           வழியாய்க் காண வெருண்டிடும்
                           பேய்கள் 
                           பொல்லா தவரைப் பொடிபொடி
                           யாக்கும் 
                           நல்லோர் நினைவில் நடனம்
                           புரியும் 
                           சர்வ சத்ரு சங்காரத்தடி
                           
                           அறிந்தென உள்ளம் அஷ்டலட்சுமிகளில்
                           
                           வீரலட்சுமிக்கு விருந்துஉண
                           வாகச் 
                           சூரபத் மாவைத் துணித்தகை
                           யதனால் 
                           இருபத் தேழ்வர்க்கு
                           உவந்து அமுது அளித்த
                           
                           குருபரன் பழநிக் குன்றினில்
                           இருக்கும் 
                           சின்னக் குழந்தை சேவடி
                           போற்றி 
                           எனைத்தடுத்து ஆட்கொள
                           எந்தனதுள்ளம் 
                           மேவிய வடிவுறும் வேலவா
                           போற்றி 
                           தேவர்கள் சேனா பதியே
                           போற்றி 
                           குறமகள் மனமகிழ் கோவே
                           போற்றி 
                           திறமிகு திவ்விய தேகா
                           போற்றி 
                           இடும்பா யுதனே இரும்பா
                           போற்றி 
                           கடம்பா போற்றி கந்தா
                           போற்றி 
                           வெட்சி புனையும் வேலா
                           போற்றி 
                           உயர்கிரி கனக சபைக்கு
                           ஓர் அரசே 
                           மயில்நட மிடுவோய் மலரடி
                           சரணம் 
                           சரணம் சரணம் சரவண பவ ஓம்
                           
                           சரணம் சரணம் சண்முகா
                           சரணம்