Click the link below for the Audio...
சிவபுராணம்
திருச்சிற்றம்பலம்
தொல்லை யிரும்பிறவிச்
சூழுந் தளைநீக்கி
அல்லலறுத்
தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா
நெறியளிக்கும் வாதவூர்
எங்கோன்
திருவா சகமென்னந்
தேன்
நமச்சிவாய வாஅழ்க
நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும்
என்நெஞ்சில் நீங்காதான்
தாள்வாழ்க
கோகழி யாண்ட
குருமணிதன் தாள்வாழ்க
ஆகம
மாகிநின் றண்ணிப்பான்
தாள் வாழ்க
ஏகன் அநேகன்
இறைவன் அடிவாழ்க
வேகம்
கெடுத்தாண்ட வேந்தன்
அடி வெல்க
பிறப்பறுக்கும்
பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள்
வெல்க
புறத்தார்க்குச்
சேயோன்தன் பூங்கழல்கள்
வெல்க
கரம்குவிவார்
உள்மகிழும் கோன்கழல்கள்
வெல்க
சிரம்குவிவார்
ஓங்குவிக்கும் சீரோன்
கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி
எந்தை அடிபோற்றி
தேசன்
அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே
நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப்
பிறப்பறுக்கும் மன்னன்
அடிபோற்றி
சீரார் பெருந்துறைநம்
தேவன் அடிபோற்றி
ஆராத
இன்பம் அருளுமலை போற்றி
சிவன்
அவன் என்சிந்தையுன் நின்ற
அதனால்
அவன் அருளாலே
அவன்தாள் வணங்கிச்
சிந்தை
மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை
வினைமுழுதும் ஓய உரைப்பான்யான்
கண்ணுதலான்
தன்கருணைக் கண்காட்ட
வந்தெய்தி
எண்ணுதற்
கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து
மண்ணிறைந்து மிக்காய்
விளங்கொளியாய்
எண்ணிறந்
தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா
வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப்
பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக
மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க்
கணங்களாய்
வல்அசுர ராகி
முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ
நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லா
பிற்ப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான்
மெய்யேஉன்
பொன்னடிகள் கண்டின்று
வீடுற்றேன்
உய்யஎன்
உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்ய
விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா
என வோங்கி ஆழ்ந்தகன்ற
நுண்ணியனே
வெய்யாய்
தணியாய் இயமான னாம்விமலா
பொய்ய
யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான
மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம்
தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம்
அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய்
காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய்
என்னைப் புகுவிப்பாய்நின்
தொழும்பின்
நாற்றத்தின்
நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம்
மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால்
கன்னலோடு நெய்கலந்தாற்
போலச்
சிறந்தடியார்
சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த
பிறப்பறுக்கும் எங்கள்பெருமான்
நிறங்கள்
ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள்
ஏத்த
மறைந்திருந்தாய்
எம்பெருமான் வுல்வினையேன்
தன்னை
மறைந்திட மூடிய
மாய இருளை
அறம்பாவம்
என்னும் அருங்கயிற்றால்
கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும்
புழு வழுக்கு மூடி
மலஞ்சோறும்
ஒன்பது வாயிற்குடிலை
மலங்கப்
புலனைந்தும் வஞ்சனையைச்
செய்ய
விலங்கு மனத்தால்
விமலா உனக்குக்
கலந்த
அன்பாகிக் கசிந்து உள்உருகும்
நலந்தான்
இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்
மேல் வந்தருளி நீள்கழல்கள்
காட்டி
நாயிற் கடையாய்க்
கிடந்த அடியேற்குத்
தாயிற்
சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற
சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே
தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம்
பற்றறுத்துப் பாரிக்கும்
ஆரியனே
நேச அருள் புரிந்து
நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது
நின்ற பெருங்கருணைப்
பேராறே
ஆரா அமுதே அளவிலாப்
பெம்மானே
ஓராதார் உள்ளத்து
ஒளிக்கும் ஒளியானே
நீராய்
உருக்கிஎன் ஆருயிராய்
நின்றானே
இன்பமும் துன்பமும்
இல்லானே உள்ளானே
அன்பருக்கு
அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே
துன்னிருளே தோன்றாப்
பெருமையனே
ஆதியனே அந்தம்
நடுவாகி அல்லானே
ஈர்த்து
என்னை ஆட்கொண்ட எந்தை
பெருமானே
கூர்த்த மெஞ்ஞ்ஞானத்தால்
கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய
நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும்
வரவும் புணர்வும் இலாப்
புண்ணியனே
காக்கும்
எம் காவலனே காண்பரிய
பேர் ஒளியே
ஆற்றின்ப
வெள்ளமே அத்தா மிக்காய்
நின்ற
தோற்றச் சுடர்
ஒளியாய்ச் சொல்லாத நுண்
உணர்வாய்
மாற்றமாம்
வையகத்தின் வெவ்வேறே
வந்து அறிவாம்
தேற்றனே
தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான
உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின்
உட்கிடப்ப
ஆற்றேன்எம்
ஐயா அரனேஓ என்று என்று
போற்றிப்
புகழ்ந்திருந்து பொய்கேட்டு
மெய்யானார்
மீட்டு இங்கு
வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப்
புலக்குரம்பைப் பட்டழிக்க
வல்லானே
நள்ளிருளில்
நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள்
கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற்
பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு
அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய
பாட்டின் பொருள் உணர்ந்து
சொல்லுவார்
செல்வர்
சிவபுரத்தின் உள்ளார்
சிவனடிக்கீழ்ப்
பல்லோரும்
ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்